தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் வழங்கிய விளையாட்டு உபகரணங்கள்.

தூத்துக்குடி மாவட்டம், பெருங்குளம் பேரூராட்சியில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் "அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தினை " மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் திரு.செ.ராஜு அவர்கள், தொடங்கி வைத்து, விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அவருடன், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப(பொறுப்பு),
திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.இரா.சுதாகர். மற்றும் அலுவலர்களும் முக்கிய பிரமுகர்களும் இருந்தனர்.